கும்பகோணத்தில் வாகனம் மோதி பெண் பலி

கும்பகோணம், பிப்.6: கும்பகோணம் அருகே வாகனம் மோதி பெண் பலியானார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் ராமசாமி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் அரசு பஸ் டிரைவராக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (34). இவர் நேற்று முன் தினம் அம்மாசத்திரம் அருகே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5 ம் வகுப்பு படிக்கும் தனது பெண் குழந்தையை அழைப்பதற்காக மொபட்டில் சோழன் நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த வாகனம் நிலைதடுமாறி மோதியது. இதில் புவனேஸ்வரி படுகாயம் அடைந்தார். இதனையறிந்த அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: