பொள்ளாச்சி, பிப்.4: பொள்ளாச்சியில் புதிய 14வது வார்டுக்குட்பட்ட சாம்பமூர்த்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த பலர், அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் குடியிருக்கும் வீதியில் பாதாள சாக்கடைக்கு என தோண்டப்பட்ட பகுதி இன்று வரை குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டியதாக உள்ளது. வாக்கிங் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். அப்பகுதியில் உள்ள பள்ளத்தில், தண்ணீர் நிரம்பி பள்ளம் எது, ரோடு என தெரியாமல் நடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர்.