காவேரிப்பாக்கம், ஜன.30: காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 4 ஊராட்சி செயலாளர் பதவிகளுக்கு நேர்காணல் நேற்று நடந்தது. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஈராள்சேரி, கூடலூர், மாமண்டூர், பழையப்பாளையம் ஆகிய 4 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக இருந்து வந்தன. இந்த பதவிகளுக்கு விண்ணபங்கள் கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை பெறப்பட்டன. இதில் ஈராள்சேரி ஊராட்சி செயலாளர் பதவிக்கு 9 பேரும், பழையபாளையம் ஊராட்சி செயலாளர் பதவிக்கு 46 பேரும், மாமண்டூருக்கு 21 பேரும், கூடலூருக்கு 132 பேரும் என மொத்தம் 208 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் நேற்று முன்தினம் நடந்தது.