காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 4 ஊராட்சி செயலாளர் பதவிகளுக்கு நேர்காணல்

காவேரிப்பாக்கம், ஜன.30: காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 4 ஊராட்சி செயலாளர் பதவிகளுக்கு நேர்காணல் நேற்று நடந்தது. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஈராள்சேரி, கூடலூர், மாமண்டூர், பழையப்பாளையம் ஆகிய 4 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர் பதவியிடம் காலியாக இருந்து வந்தன. இந்த பதவிகளுக்கு விண்ணபங்கள் கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை பெறப்பட்டன. இதில் ஈராள்சேரி ஊராட்சி செயலாளர் பதவிக்கு 9 பேரும், பழையபாளையம் ஊராட்சி செயலாளர் பதவிக்கு 46 பேரும், மாமண்டூருக்கு 21 பேரும், கூடலூருக்கு 132 பேரும் என மொத்தம் 208 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் நேற்று முன்தினம் நடந்தது.

தொடர்ந்து, நேற்றும் நடந்தது. இந்த நேர்காணலில் 137 பேர் பங்கேற்றனர். 71 பேர் பங்கேற்கவில்லை. இவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சீனிவாசன், ரவி, ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேர்காணல் நடத்தி சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்தனர்.

Related Stories: