மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

சீர்காழி, ஜன.30: சீநாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் மாற்று திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெஜினாராணி, கஜேந்திரன், இளநிலை மறுவாழ்வு அலுவலர் முடநீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் முன்னிலை வகித்தன. செயல்திறன் உதவியாளர் பாரத்குமார் வரவேற்றார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன். சசிகுமார். மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குலோத்துங்கன். ஒன்றிய கவுன்சிலர் விசாகர். ஊராட்சி தலைவர்கள் சுந்தர்ராஜன், அஞ்சம்மாள், முன்னாள் ஊராட்சி தலைவர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: