திருச்செங்கோடு, ஜன.30: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், என்ஆர்சி, என்பிஆர் தயாரிப்பதை நிறுத்தக்கோரியும், வருகிற பிப்ரவரி 2ம் தேதி முதல் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடக்கிறது. இதற்கான அனைத்து கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று (30ம்தேதி) காலை 11மணிக்கு திருச்செங்கோடு சிஎச்பி.காலனியில் உள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.