நீடாமங்கலம்,ஜன.29: நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜாராமன் தலைமையில் தமிழக முதல்வர்,திருவாரூர் கலெக்டர் மற்றும் பல அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நீடாமங்கலம் அண்ணாசாலை கடைவீதியிலிருந்து ரயில் நிலையம் வரை உள்ள இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் பல விபத்துக்கள் ஏற்படும் பகுதியாக உள்ளது.இந்நிலையில் நீடாமங்கலம் கடைத்தெரு வடக்குப்பகுதியில் டாஸ்மாக் கடை ஏற்கனவே உள்ளது.இந்நிலையில் ரயில் நிலையத்திற்கும் அண்ணாசிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பது தெரிந்தே. பொது மக்கள் மீது அக்கரையில்லாமல் சிலரால் டாஸ்மாக் கடை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.மேற்படி பகுதியில் இந்து,கிறிஸ்தவர்கள்,முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் உள்ளது.