புதுக்கோட்டை, ஜன.29: வேளாண்மை அறிவியல் நிலையத்தின்கீழ் நிக்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கால்நடை வளர்ப்புக்கு உகந்த சூப்பர் நேப்பியர் பசுந்தீவனம் குறித்து பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது. அப்போது உழவியல்துறை பேராசிரியர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பேசுகையில் ஆசியாவில் உள்ள நேப்பியர் புல்களிலேயே அதிகமான புரச்சத்து 16 சதம் முதல் 18 சதம் வரை மற்றும் அதிகமகசூல் கிடைக்கும் 200 டன் பசும் தீவனம் இனமாகும்.நம்மிடம் தற்போது உள்ள கோ-4 ,கோ-5 ,வகை நேப்பியர் புல்லுடன் ஒப்பிடும் போது அதன் மகசூல் புரதசத்து ஆகியவை இரண்டு மடங்கு கூடுதல் ஆகும்.இத்தீவனபுல்லின் புரதசத்து 14-18 சதம் ஆகும்.இது ஆசியாவில் இருக்கும் அனைத்துவகையான நேப்பியர் புற்களைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். ஒரு ஏக்கருக்கு 200 டன் பசுந்தீவனம் கிடைத்தால் சுமார் 15 கறவைமாடுகளின் தீவனதேவையை இப்புல் பூர்த்தி செய்ய வல்லது.சூப்பர் நேப்பியர் புல்லை விதைக்கரணைகள் மூலம் நடவு செய்யலாம்.ஒருஏக்கருக்கு 10 ஆயிரம் விதைக்கரணை தேவைப்படும்.ஒரு ஏக்கருக்கு 200 டன் பசுந்தீவனம் கிடைக்கிறது.தொடர்ந்து அடுத்த 40 நாட்களில்ஒருமுறை அறுவடை செய்யலாம்.