நாகை, ஜன.29: பெற்றோர்கள் அச்சுறுத்தலுக்கு பயந்து நாகை எஸ்பி அலுவலகத்தில் காதல்ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அம்மாச்சி ஊரணி பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி(21). இவர் நேற்று தனது காதலன் யாசர்அராபத்அலி என்பவருடன் நாகை எஸ்பி அலுவலகம் வந்தார். அவர்கள் நாகை எஸ்பியை சந்தித்து மனு கொடுத்தனர். இதில் தேவகோட்டை வாவாசந்து பகுதியைச் சேர்ந்த யாசர்அராபத்அலியை நான் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். இதை அறிந்த இருதரப்பையும் சேர்ந்த பெற்றோர்கள் எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.