வேதாரண்யம், ஜன.27: வேதாரண்யத்தில் வணிகர்களை பாதிக்கும் கந்துவட்டி கொடுமைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேதாரண்யத்தில் வணிகர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் திருமலை செந்தில் தலைமை வகித்தார் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வேதை.முருகையன்,வேதாரண்யம் சங்க செயலாளர் முரளி, பொருளாளர் அய்யாத்துரை, பொதுச்செயலாளர் கவிபாரதி இணைச் செயலாளர் சிவகுமார், ஆனந்தகிருஷ்ணன்,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பாரி, விவசாய சங்கத்தை சேர்ந்த பார்த்தசாரதி, ஆயக்காரன்புலம் சங்கத் தலைவர் மதியரசு, மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.