வேதாரண்யம், ஜன.27: வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம்-4ம் சேத்தியில் கோவில்குளத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு களப்பயணம் சென்றனர்.
ஆயக்காரன்புலம் கோவில்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 20 பேர் பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் கீழ் ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு அப்பள்ளி மாணவ-மாணவிகளோடு இறைவணக்கம், யோகா பயிற்சி பள்ளியில் பாடம் கற்பித்தல் பள்ளியின் சுற்றுசூழல் அறிதல் மாணவர்களின் கருத்து பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொண்டனர். பின்பு அங்குள்ள அய்யனார் கோவிலில் சென்று தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.