மூணாறு, ஜன.28: மூணாறு அருகே கேரள-தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்துள்ள சதுரங்கபாறை பகுதியில் போலி ஆவணங்கள் தயார் செய்து ஆக்கிரமித்த வருவத்துறைக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது.
மூணாறு அருகே கேரளா-தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்துள்ள சதுரங்கபாறை கிராமத்தில் தமிழ்நாடு எல்லை பகுதியை ஒட்டியுள்ள சர்வை எண் 98/2 ல் தொகுதி எண் 19ல் உள்ள 9 ஏக்கர் நிலத்தை சதுரங்கபாறையை சேர்ந்த சாக்கோ, பழனிச்சாமி செட்டியார் ஆகியோர் போலி ஆவணங்கள் தயார் செய்து ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்றனர். நிலத்தை வாங்கிய உரிமையாளர் பேபி ஜோசப் நிலத்தின் உரிமம் மற்றும் நிலத்தின் சர்வை எண் சம்பந்தமான சந்தேகங்களுக்காக கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்திருந்தார்.