தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம், குலசேகரன் தெருவில், பொதுமக்கள் அனைவரும் குப்பை கழிவுகளை சாலையிலும், அருகில் உள்ள காலி இடங்களிலும் கொட்டிவிட்டு செல்வதால், அதிகப்படியான குப்பை குவிந்து சாலை முழுவதும் பரவி கிடந்தது.
இதனை நகராட்சி ஊழியர்கள் அகற்றாமல் இருந்ததால் கடுமையான துர்நாற்றம் வீசியதுடன் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது. இதுகுறித்த செய்தி ‘தினகரன்’ நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது.