நாகர்கோவில், ஜன.28: தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியம் திட்டம், மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதி, மாவட்ட மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணையம் தொகுதி -1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, திறன்மேம்பாட்டு பயிற்சி பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு 18 முதல் 65 வரை.