புதுக்கோட்டை, ஜன.24: புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டில் அதிமுக கவுன்சிலரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 21ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 7-வது வார்டில் த.மா.காவை சேர்ந்த கூகூர் சண்முகம் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் த.மா.கா. கூகூர் சண்முகம் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த கலியமூர்த்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.