சீர்காழி, ஜன.24: நாகை மாவட்ட் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் தலைமை வகித்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ஜெயராமன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுரு, டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தனர். முதல்வர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் பேசுகையில், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக் கூடாது.