சிவகங்கை, ஜன. 23: சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 20ம் தேதி இரவு சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையை சேர்ந்த அண்ணாமலை (19), நாடாமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் திருமால்கண்ணன்(30) ஆகிய இருவரும் டூவீலரில் வரும் போது நேருக்கு நேர் மோதிய விபத்தில் அண்ணாமலை மற்றும் திருமால் கண்ணன் இருவரும் இறந்தனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நேற்று முன்தினம் இருவரது உடலுக்கும் பிரேத பரிசோதனை நடந்தது.