கல்பாரப்பட்டியில் பழுதான கட்டிடத்தை இடிக்க வலியுறுத்தல்

இளம்பிள்ளை, ஜன.23:  இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டியில் பழுதடைந்த நிலையில் இருக்கும் வேளாண்மை துறை அலுவலர் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளம்பிள்ளை அருகே வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சி மன்றம் அருகே வேளாண்மை துறை அலுவலர்கள், தங்கும் வகையில் குடியிருப்புகள் கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிங்கள் பழுதடைந்ததால், இதில் பணியாளர்கள் யாரும் தங்குவதில்லை. இதனால் குடியிருப்புகள் அனைத்து காலியாகவே உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம், நூலகம், அங்கன்வாடி மையம், தபால் அலுவலகம், மாரியம்மன் கோயில் உள்ளிட்டவை உள்ளன. எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: