திருப்புத்தூர், ஜன. 22: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் பெண் சிசு கொலையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.திருப்புத்தூர் அரசு மருத்துவமனையும், ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியும் இணைந்து நேற்று பெண் சிசு கொலை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் கல்லூரி வாசலில் இருந்து பெண் சிசு கொலையை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்நி ஊர்வலமாக சென்றனர்.