திருத்துறைப்பூண்டி, ஜன.22: விவசாய ெதாழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும் என திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்டக் குழு கூட்டம் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். எதிர்கால வேலை குறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் பேசினார்.கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர்கள் ராஜா, நேதாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.