திருவரங்குளத்தில் 48 ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிமுக கூட்டம்

புதுக்கோட்டை, ஜன. 22: திருவரங்களத்தில் 48 ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் -திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 48 ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிமுக கூட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் கோகுலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 48 ஊராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் செய்ய வேண்டிய பணிகளில் திறம்பட செய்திட அரசு உத்தரவிற்கிணங்க செயல்படவும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. ஒன்றிய அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: