பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லட்சார்ச்சனை விழா

பொன்னமராவதி, மே 3: பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 35ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா இன்று தொடங்கி ஒரு வார காலம் நடைபெற உள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவிற்கு முதல் நாள் லட்சார்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 35ம் ஆண்டாக லட்சார்ச்சனை விழா நடந்தது. தொடக்கமாக பட்டமரத்தான் சுவாமிக்கு சிறப்பு அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் மற்றும் தமிழாசிரியர் முருகேசன் உள்ளிட்டோர் மந்திரம் ஒத லட்சம் முறை அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் மற்றும் லட்சார்ச்சனை குழுவினர் செய்திருந்தனர். பூஜையை சரவணன் பரணி குருக்கள் செய்திருந்தனர்.

The post பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லட்சார்ச்சனை விழா appeared first on Dinakaran.

Related Stories: