திண்டுக்கல், ஜன. 21: ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக மிரட்டுவதாகக் கூறி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜா. கூலித்தொழிலாளியான இவரது மனைவி அந்தோணி ஜெனிமேரி. இப்பகுதியில் கிறிஸ்துராஜா தனது உறவினர்கள் 6 குடும்பத்தினருடன் சொந்த செலவில் புனித சந்தியாகப்பர் கோயில் கட்டி உள்ளார். ஊர் நாட்டாமை, மணியகாரர் உள்ளிட்ட சிலர் முன்விரோதம் காரணமாக கோயில் சம்பந்தமாக இவர்களிடம் வரி வாங்குவதில்லை என்று தெரிகிறது.