புதுகை ரயில் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

புதுக்கோட்டை, ஜன.21: புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி, காரைக்குடி, ராமேஸ்வரம், சிவகங்கை, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில்கள் சென்று வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி வேலை நிமித்தமாகவும் ஏராளமானோர் தினமும் பயணிக்கின்றனர். இந்நிலையில் புதுகை ரயிவே நிலையத்தில் சில மதுபிரியர்கள் மதுவை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். இது பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. எனவே பராமரிப்பு வசதியை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: