பொதுமக்கள் கடும் அவதி ஓய்வூதியர்கள் ஜிஎஸ்டி அறிக்கை சமர்ப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன.21: கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வருமானவரி அறிக்கையினை வருகிற பிப்ரவரி 7ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலத்தின் வழியாக ஓய்வூதியம் பெற்று வருகின்ற ஓய்வூதியர்கள் தங்களது மாத ஓய்வூதியம் ரூ.42 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெற்று வருகின்ற ஓய்வூதியர்கள் 2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையினை ஓய்வூதியம் பெற்று வருகின்ற மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற பிப்ரவரி 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் மார்ச் 2019 முதல் ஜனவரி 2020 வரை உள்ள காலத்தில் ஓய்வூதியம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை அறிவதற்கு tn.gov.karuvoolam.in < //tn.gov.karuvoolam.in/ > என்ற இணையதளத்தில் ECS status of pensioners என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக கருவூலம் சென்று ஓய்வூதிய விபரங்களை பெற வேண்டியதில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: