புதுக்கோட்டை, ஜன.21: கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வருமானவரி அறிக்கையினை வருகிற பிப்ரவரி 7ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்ட கருவூல அதிகாரி மூக்கையா வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலத்தின் வழியாக ஓய்வூதியம் பெற்று வருகின்ற ஓய்வூதியர்கள் தங்களது மாத ஓய்வூதியம் ரூ.42 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெற்று வருகின்ற ஓய்வூதியர்கள் 2019-20ம் நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையினை ஓய்வூதியம் பெற்று வருகின்ற மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் வருகிற பிப்ரவரி 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.