பெரணமல்லூர், ஜன.21: பெரணமல்லூர் பகுதியில் மின்உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. பெரணமல்லூர் அண்ணாசிலை அருகே நேற்று மாலை நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு உதவி செயற்பொறியாளர் எழிலரசி தலைமை தாங்கினார். உதவி மின் பொறியாளர் காந்தி, ஆடலரசன் முன்னிலை வகித்தனர். உதவி மின் பொறியாளர் ரவீந்திரன் வரவேற்றார். தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் பொதுமக்கள் இயற்கை இடற்பாடுகள் இடி, மின்னல் மற்றும் மழை காலங்களில் சேதமடைந்த மின் கட்டமைப்பு அருகில் செல்லக்கூடாது. அறுந்து கிடக்கும் மின் கம்பியினை தொடக்கூடாது. மின் கம்பங்களில் ஆடு, மாடுகளை கட்டுவது, ஈரத்துணியை காயபோடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.