நாகை, ஜன.21: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கை தவறாக பயன்படுத்திய தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பூம்புகார் மீனவர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் சீர்காழி ஒன்றியம் காவிரிபூம்பட்டினம் 12 வது வார்டு உறுப்பினர் செஞ்சிராணி தலைமையில் வந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சீர்காழி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவிரிபூம்பட்டினம் ஊராட்சியில் 12 வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன்.