தோகைமலை, ஜன. 21: தோகைமலை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள ஆளிப்பட்டி அருகே மணிக்கட்டியூரை சேர்ந்தவர் முருகேசன் மகன் சக்திவேல்(20). இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிஎம்இ படித்து வந்தார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக மணப்பாறை- குளித்தலை மெயின்ரோட்டில் குளித்தலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சக்திவேல் சென்றார். அப்போது கே.துறையூர் அருகில் அதே ரோட்டில் எதிரே வந்த தோகைமலையை சேர்ந்த பெரியதம்பி மகன் பொன்சங்கர்(24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.