பண்ருட்டி, ஜன. 21: பண்ருட்டி அருகே பண்டரகோட்டை, தொரப்பாடி கிராம இணைப்பு சாலை உள்ளது. பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இரு கிராம மக்களும் சேதமடைந்த இந்த சாலையின் வழியாகத்தான் சென்று வந்தனர். பள்ளி மாணவர்கள், விவசாயிகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 1.20 கி.மீ தூர சாலை ரூ.36.04 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதன் காரணமாக சாலை பணியை மேற்கொள்ள பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம், மேடுகள் சரிசெய்யப்பட்டு ஜல்லிகள் கொட்டப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் சாலை பணி செய்வதில் பிரச்னை எழுந்தன.