காரைக்குடி, ஜன.20: காரைக்குடி கிராம பகுதிகளில் பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்துள்ளது.ஒருமுறையே பயன்படுத்தி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது கடினம். இவை மழைநீரை நிலத்திற்குள் செல்ல விடாமல் நிலத்தடி நீரை பெருக விடாமல் தடுக்கும்.எனவே கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைசெய்துள்ளது. இதில் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், மேஜைமீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித டம்டளர், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மகோல் டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ராவ், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைபகள், கேரி பேக்குகள் எந்த அளவு, எந்த தடிமனாக இருந்தாலும் பயன்படுத்த கூடாது. நெய்யாத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடிகளை தடை செய்துள்ளனர்.