தூத்துக்குடி, ஜன.20: தூத்துக்குடி மாவட்ட பாஜ தலைவராக பால்ராஜ் தேர்வு செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட பாஜ தலைவர் தேர்வு தொடர்பான கூட்டம் அழகேசபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் சுப.நாகராஜன், மாநில செயலாளர் பொன் பாலகணபதி, மாநில தேர்தல் அலுவலர் திருமலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டனர்.