திருவாரூர், ஜன. 19: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு செல்வி, சூரியலட்சுமி, சரஸ்வதி மற்றும் பானுமதி ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் அதிமுக ஆதரவு கொண்ட வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடைபெற்றதாக கூறி சுயேட்சைவேட்பாளரும், தமாகாவின் மாவட்ட துணை தலைவருமான செல்வதுரை என்பவர் மனைவி சூரியலட்சுமி தரப்பில் கடந்த 6ம் தேதி தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசின் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்திருந்தனர். ஊராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்றும், அப்போது இது குறித்து ஆவணங்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் தியாகராஜன் (50) மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர் ஏசுராஜ் உட்பட 11 பேர் வண்டாம்பாளையம் படுகை தெருவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு பைக்கில் சாமி கும்பிட சென்றனர்.