இளையராஜாவை தேடி வருகின்றனர். வாலிபர் கைது குளத்தில் மணல் அள்ளிய டிராக்டர், பொக்லைன் பறிமுதல்

மயிலாடுதுறை, ஜன.19: மயிலாடுதுறை அருகே கடக்கம் தாமரை குளத்தில் அகரஆதனூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த மகேஷ்(39) என்பவர் தனது டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தார். மேலும் எரவாஞ்சேரியை சேர்ந்த கருணாநிதி மகன் பிரகாஷ்(22) என்பவர் ஜேசிபி மூலம் மணலை அள்ளிப்போட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்ட பெரம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரரவி மற்றும் போலீசார் தாமரைக்குளம் சென்று டிராக்டர் மற்றும் ஜேசிபியை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு சென்றனர். டிராக்டர் டிரைவர் மகேஷ் மற்றும் ஜேசிபி ஓட்டுனர் பிரகாஷ் ஆகியோரை கைது செய்து காவலில் அடைத்தனர்.

Related Stories: