செய்யாறு, ஜன.19: செய்யாறு அருகே எல்லையம்மன் கோயிலில் காணும் பொங்கலையொட்டி தெப்பல் உற்சவம் நடந்தது. செய்யாறு தாலுகா இளநீர்குன்றம் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சல் தாலாட்டு சேவை நடந்தது.