திருவில்லிபுத்தூர், ஜன. 19: தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவியருக்கான மாநில அளவிலான சைக்கிள் போட்டி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இப்போட்டி 14, 17 மற்றும் 19 வயது ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. 17வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 20 கி.மீ சைக்கிள் போட்டியில் திருவில்லிபுத்தூர் அரிமா பள்ளி மாணவர் நித்தீஷ் இரண்டாம் இடமும், 17வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 10 கி.மீ சைக்கிள் போட்டியில் இப்பள்ளி மாணவி சுபிக்ஷா முதலிடமும் பிடித்தனர். 19வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 20 கி.மீ சைக்கிள் போட்டியில் மாணவி மதுமிதா மூன்றாம் இடம் பிடித்தார்.