பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

சிவகாசி, ஜன. 19:  சிவகாசியில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில், பிரம்மோத்ஸவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலையில் ஸ்ரீதேவி, பூதேவி வெங்கடாசலபதி பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் காலையிலும் மாலையிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

Related Stories: