ராஜபாளையம், ஜன. 14: ராஜபாளையத்தில் மதுரை சாலையில் உள்ள பழைய பஸ்நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 76 கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடைக்கு எடுத்திருப்போர் மாதம் 5ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் வாடகை செலுத்த வேண்டும். ஆனால், சுமார் 20க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் வாடகை நிலுவையில் வைத்துள்ளனர். இதில் கடைகளை வாடகைக்கு எடுத்த முப்புடாதி ரூ.4.77 லட்சம், வசந்தகுமார் ரூ.1.20 லட்சம், கிருஷ்ணவேணி மற்றும் பொன்ராஜ் ஆகியோர் ரூ.4.20 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்தார். இவர்களுக்கு நகராட்சி வருவாய் அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.