புதுக்கோட்டை, ஜன.14: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலரை திமுகவினர் கடத்தி சென்றுறதாக பெண் கவுன்சிலர் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அன்னவாசல் ஒன்றியத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 9 இடங்களையும், திமுக 10 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது. ஒன்றியக் குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் நடந்த தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலில் வந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ஜெயம் தங்கவேல் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தவுடன் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து மறைமுக தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை. இதனையடுத்து அதிமுக சார்பில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு ராமசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.