அரியலூர், ஜன. 14: அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியி–்ல் 1995ம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயராகவன் தலைமை வகித்தார். 1995ம் ஆண்டு கற்பித்த ஆசிரியர்கள் முத்துவேல், ராஜேந்திரன், மணிமொழி மற்றும் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியர் முத்துவேல் பேசும்போது, அன்றைய மாணவர்களை கண்டித்தோம், தண்டித்தோம். ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்தாமல் படித்தீர்கள். இன்றைக்கு நல்ல நிலையில் அனைத்து மாணவர்களும் உள்ளீர்கள். தற்போது ஆசிரியர்களுக்கு விதிக்கும் பல கட்டுப்பாடுகளால் மாணவர்- ஆசிரியர் உறவு பல மைல் அப்பால் உள்ளது என்றார். ஆசிரியர் மணிமொழி பேசியபோது, நாங்கள் பாடம் எடுத்தபோது பல பிரச்னைகளை எதிர்கொண்டோம். எங்களுக்கான வெகுமதி தான் இந்த பாராட்டு விழா என்றார்.