வலங்கைமான்,ஜன.14: வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் பெற விவசாயிகளுக்கு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன கருவிகள், தெளிப்பு நீர் பாசன கருவிகள் மற்றும் மழைத்தூவான் மானியத்துடன் வேளாண்மை துறையால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் மைல் கல்லாக விவசாயிகளின் நலன் கருதி நுண்ணீர் பாசன திட்டத்தை ஊக்கப்படுத்தும் துணை நீர்பாசன மேலாண்மை திட்டம் அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பாசன கருவிகள் நுண்ணீர் பாசன திட்டத்தில் அதாவது அரசு இலவசமாக வழங்கும் 2.5” பைப் வாங்குவோருக்கு மட்டுமே இத்திட்டத்துடன் இணைத்து கீழ்கண்ட இனத்திற்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது.