கீழ்வேளூர், ஜன.13: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கிள்ளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்று திட்ட தொடக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்து தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் செங்குட்டுவன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தேவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது பள்ளி பரிமாற்று திட்டம் மற்றும் நோக்கம் குறித்து ஹலியாபானு பேசினார். ஆசிரியர் கலைச்செல்வி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில உரையாடல், ஆங்கில நாடகம் குறித்து பயிற்சி அளித்தார். அறிவியல் ஆசிரியர் சந்திரசேகர் எளிய அறிவியல் பரிசோதனை குறித்து விளக்கினார்.