கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்

சிதம்பரம், ஜன. 13: சிதம்பரம் அருகே உள்ள கீழமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் மகன் பிரதீப்(19), கல்லூரி மாணவர். இவரும், இவரது நண்பரான ராம்குமார் (22) என்பவரும் சம்பவத்தன்று கீழமூங்கிலடி பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று பிரதீப்பையும், ராம்குமாரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பிரதீப் அளித்த புகாரின் பேரில் 15 பேர் மீதும் கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: