நெய்வேலி, ஜன. 13: நெய்வேலி அடுத்துள்ள மந்தாரக்குப்பம் சாலை, கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் முக்கிய சாலையாகும். இங்கு கடலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு பேருந்துகள் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் வந்து மேற்கண்ட ஊர்களுக்கு செல்கிறது. இவ்வழியாக நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கம் அருகே இருப்பதால் தினமும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் என்எல்சி தொழிலாளர்கள் பணிக்கு செல்கின்றனர்.