விருதுநகர், ஜன. 12: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 25 கவுன்சிலர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவிற்கு 9 இடங்களும், மதிமுகவிற்கு ஒரு இடம் என திமுக கூட்டணிக்கு 10 இடங்களும், அதிமுகவிற்கு 14 இடங்களும், ஒரு சுயேட்சை வெற்றி பெற்றனர். இதில் அதிமுகவில் வெற்றி பெற்ற தமிழ்செல்வன் திமுகவில் இணைந்ததால் திமுக கூட்டணிக்கு 11 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களும் இருந்தன.நேற்று தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்காக இரு தரப்பினரும் பாதுகாப்பாக வேன்களில் அழைத்து வரப்பட்டனர். ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் அதிமுகவின் சுமதி ராஜசேகர் 15 ஓட்டுகளும், திமுக சார்பில் போட்டியிட்ட சரஸ்வதி 10 ஓட்டுகளும் பெற்றனர்.