சிவகாசி, ஜன. 12: விருதுநகர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி, விருதுநகர் ஒன்றியம், வெம்பக்கோட்டை ஒன்றியத்தை அதிமுக கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவராக வசந்திமான்ராஜ், துணைத்தலைவராக சுபாஷினி, விருதுநகர் யூனியன் சேர்மனாக சுமதி ராஜசேகர், துணைத்தலைவராக முத்துலட்சுமி வெம்பக்கோட்டை யூனியன் தலைவராக பஞ்சவர்ணம் கணேசன், துணைத்தலைவராக ராமராஜ்பாண்டியன் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற அனைவரும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நேற்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.