உசிலம்பட்டி, ஜன.12: உசிலம்பட்டி ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடந்து முடிந்து கவுன்சிலர்கள் பதவியேற்றனர். இதில் அதிமுக 5, திமுக 4, காங்கிரஸ் 1, அமமுக 2, சுயேட்சை 1. நேற்று தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் திமுக சார்பில் ரஞ்சனி சுதந்திரமும், அதிமுக சார்பில் பாண்டியம்மாள் உக்கிரபாண்டியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர். திமுக 7 கவுன்சிலர்களையும், அதிமுக, சுயேட்சை கூட்டணியுடன் 6 கவுன்சிலர்களை தங்கள் கைவசம் வைத்திருந்தனர். திமுக கூட்டணி மெஜாரிட்டியாக இருந்ததால், அதிமுக வினர்கள் வாக்கெடுப்பு நடத்த கூடாது என்று மேஜை மற்றும் நாற்காலிகளை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.