கொத்தங்குடியில் குறைதீர் முகாம்

பாபநாசம், ஜன. 12: பாபநாசம் அருகே மெலட்டூர் அடுத்த கொத்தங்குடியில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. பாபநாசம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கார்த்திக்கேயன், துணை தாசில்தார்கள் செந்தில்குமார், ஹெலன் ஜாய்ஸ், மெலட்டூர் ஆர்ஐ கலையரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கம் பங்கேற்றனர். முகாமில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான 250 மனுக்கள் பயனாளிகளிடமிருந்து வரப்பெற்றன. இந்த மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

Related Stories: