கோவை, ஜன.12: .கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் தேயிலை ஏலம் நடந்தது.இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏலதாரர்கள் கலந்துகொண்டு ஆன்லைன் மூலம் தேயிலையை ஏலம் எடுத்து வருகின்றனர். அதன்படி, தேயிலை வர்த்தக மையத்தில் இந்த வாரத்திற்கான ஏலம் நடந்தது.
ஏலத்திற்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 223 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. 2 லட்சத்து 61 ஆயிரத்து 191 கிலோ தேயிலை தூள் விற்பனையானது. விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் 79 சதவீதம் ஏலம் போனது. இதில் 45 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ தேயிலை தூள் சராசரியாக ரூ.94.60 க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் நடந்த ஏலத்தை காட்டிலும் தேயிலை தூள் விலை கிலோவுக்கு 58 காசுகள் குறைந்தது.