பள்ளிபாளையம், ஜன.12: களியனூர் அக்ரஹாரம் ஊராட்சியில், அனைவரும் துணைத்தலைவராக ஆசைப்பட்டனர். அதிர்ச்சியடைந்த தேர்தல் நடத்தும் அதிகாரி, தலைவர் ஆகியோர் 4மணி நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால், துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைத்தார்.பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், களியனூர் அக்ரஹாரம் ஊராட்சி 6 உறுப்பினர்களை கொண்டுள்ளது. இதன் தலைவர் தேர்தலில் அம்மாசை என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று, துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 6 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தேர்தல் அலுவலரிடம், 6 பேரும் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தனர். இதனால் தேர்தல் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.