மயிலாடுதுறை, ஜன.10: மயிலாடுதுறையில் காலை உணவு தாமதமாக வழங்கிய மருமகளிடம் கோபித்துக்கொண்டு ரயிலேறி வந்த மாமியாரை போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் மாலை 75 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சோகமே உருவாக அமர்ந்திருந்தார், அவர் அங்கேயே நீண்டநேரம் அமர்ந்திருந்ததைக் கண்ட ரயில்வே போலீசார் மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது மவுனமாக இருந்த அவர் பதில் சொல்ல மறுத்தார். போலீசாரின் அறிவுரையைக் கேட்டபிறகு அவர் தனது விவரத்தை தெரிவித்தார். கடலூர் லாரன்ஸ் தெருவை சேர்ந்த முனியப்பன் மனைவி அஞ்சலை (75) என்றும், வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தார்.