சின்னசேலம், ஐன. 10: சின்னசேலம் அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார். சின்னசேலம் அருகே நைனார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் ஐஸ்வர்யா(21). இவர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎட் படிப்பு படித்து வந்தார். மேலும் ஐஸ்வர்யா நமசிவாயபுரத்தில் உள்ள தனது தாய்மாமன் வீட்டில் தங்கி படித்து வந்தார். அப்போது அவருக்கும், பக்கத்து வீட்டு வாலிபர் விவேக்(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விவேக் பட்டதாரியாவார். இந்நிலையில் இருவரும் காதலித்துள்ளனர். இவர்களுடைய காதல் கடந்த ஒரு ஆண்டாக நீடித்துள்ளது.